
Give the Gift of Choice!
Too many options? Treat your friends and family to their favourite stores with a Bayshore Shopping Centre gift card, redeemable at participating retailers throughout the centre. Click below to purchase yours today!Purchase HereHome
இன்னார்க்கு இன்னாரென்று…
Coles
Loading Inventory...
இன்னார்க்கு இன்னாரென்று… in Ottawa, ON
Current price: $2.99


இன்னார்க்கு இன்னாரென்று… in Ottawa, ON
Current price: $2.99
Loading Inventory...
Size: Kobo eBook
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Coles
"அத்தை, அத்தை," என கூவிக்கொண்டே வந்த, தன் மருமகள், இலக்கியாவை, "வாடியம்மா, ஏதமா, மூணு நாளா, இந்த பொண்ணை காணோமேன்னு, தவித்து போயிட்டேன்," என்று கூறியவாறே, இலக்கியாவை வரவேற்றார்.
இவளின் குரலை கேட்ட, அத்தை மகள்கள், வனஜா, கோகிலா இருவரும், அவளை பார்த்து, கேலியாக,
"ஏண்டி வர்றதுதான் வரே! அதென்ன, அத்தை, அத்தைன்னு, ஏலம் போட்டுட்டு வரே! அமைதியா வரத் தெரியாதா?" என்றனர்.
"உம் அமைதியா வந்தா, அவளுக்கு பெயர் 'இலக்கியா' இல்லையே!" என்றார். அத்தையும் சேர்ந்து கொண்டு,
"என்ன அத்தை! நீங்களுமா!" என்று சிணுங்கினாள்.
அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வந்த, சித்தார்த், 3 நாட்களாக, பார்க்கமுடியாமல், தவித்தவன் இன்று, அவளை பார்த்ததும், மனசுக்குள் மகிழ்ச்சி அடைந்தான். ஆனாலும், அதை வெளிக்காட்டாது, தன் தங்கைகளிடம்,
"மூன்று நாளும், வீடு எவ்வளவு அமைதியாயிருந்தது. இன்று பார், ஒரே காட்டு கத்தலா இருக்கு" என்றான்.
இதை கேட்ட இலக்கியாவின் மனசு, சுருண்டது. இவனை பார்க்காது, தவித்துபோய் ஓடி வந்தால், நம் வருகையும், பேச்சும், அவனக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. ஆசையாகவோ, கேலியாகவோ பேசவேண்டாம். ஒரு பார்வையாவது பார்த்தால் ஆகாதா! நாம்தான், இவன் மீது உயிரை வைத்திருக்கோமோ! அவனுக்கு நம்மீது எந்த எண்ணமும் இல்லையோ! என்று மனசுக்குள் தவித்தாலும், எதையும் வெளிகாட்டாது, அத்தையிடம், "நான் வர்றேன், அத்தை, என்னால் யாருக்கும், எந்த சங்கடமும் வேண்டாம்." என்று கிளம்ப ஆயத்தமானாள்."ஏண்டி, உனக்கென்னாயிற்று? இன்றைக்கு, அவன் ஏதோ, விளையாட்டா, சொன்னான். இதைபோய், சீரியஸா எடுத்துகிட்டு," என்று சமாதானம், சொன்னார்.
சித்தார்த், சும்மா இராது, "ஏம்மா போறவங்களை தடுக்கிறீங்க! இன்றைக்கு, காலை டிபன், வெங்காய ஊத்தப்பம்; நான்கு மிச்சம்" என்றான். அவள் ரோஷமாக.
"அத்தை, நான் ஒன்றும், எங்க வீட்டிலே சாப்பாடு இல்லாமல் உங்க வீட்டுக்கு சாப்பிட வரல்லை! 3 நாளாக, உங்களை எல்லாம் பார்க்கலையேன்னு, வந்தா! நீங்க, இப்படித்தான் பேசறதா! இனிமேல், நான், உங்க வீட்டுக்கு, வந்தா, ஏன் வந்தேன்னு? கேளுங்க!" என்றவள் கண்கலங்க, குரல் தழுதழுக்க, உடனே வேகமாக அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.
இதை எதிர்பார்க்காதவர்கள், திகைச்சு போய் நிற்க, அத்தை, தான், "ஏ., இலக்கியா நில்," என்று கூற, அதை காதில் வாங்கி கொள்ளாத, இறங்கிய, இலக்கியாவின் காதுகளில், சித்தார்த் கூறியது, ஸ்பஷ்டமாக விழுந்தது. தன் அம்மா அழைத்தும், பதில் பேசாது சென்றவளின் மீது சித்தார்த்க்கு, கோபம் வர...
"போனா, போறா! விடுங்கம்மா! ஏன் போய் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க!" என்று அம்மாவை கடிந்து கொண்டான். ஆனா மனசில், சங்கடமாக உணர்ந்தான். தான் எப்போதும் போல், அவளை சீண்ட, இன்று என்னாயிற்று, அவளுக்கு! என யோசித்தான்.
அவன் அம்மாவோ, "பாவம்டா, அந்த பொண்ணு, அத்தை, அத்தைன்னு நம்ம வீட்டையே சுத்தி, சுத்தி வரா! அவளை போய்" என்று தன் மகனிடம், ஆதங்கப்பட்டார்.
இதையெல்லாம், பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த, அவன் தங்கைகளும் அம்மாவுக்கு ஆதரவாக பேச, அவன், மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
தன்வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இலக்கியாவின் மனமோ, சொல்ல முடியாத வேதனையில், தத்தளிக்க, பொங்கி வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள். 'இது விஷயம் நம் வீட்டுக்கு தெரியகூடாது.' என எண்ணியவள். தன் முகத்தை நன்கு துடைத்துவிட்டு, இயல்பாக வைத்துகொண்டு, சென்றாள்
"அத்தை, அத்தை," என கூவிக்கொண்டே வந்த, தன் மருமகள், இலக்கியாவை, "வாடியம்மா, ஏதமா, மூணு நாளா, இந்த பொண்ணை காணோமேன்னு, தவித்து போயிட்டேன்," என்று கூறியவாறே, இலக்கியாவை வரவேற்றார்.
இவளின் குரலை கேட்ட, அத்தை மகள்கள், வனஜா, கோகிலா இருவரும், அவளை பார்த்து, கேலியாக,
"ஏண்டி வர்றதுதான் வரே! அதென்ன, அத்தை, அத்தைன்னு, ஏலம் போட்டுட்டு வரே! அமைதியா வரத் தெரியாதா?" என்றனர்.
"உம் அமைதியா வந்தா, அவளுக்கு பெயர் 'இலக்கியா' இல்லையே!" என்றார். அத்தையும் சேர்ந்து கொண்டு,
"என்ன அத்தை! நீங்களுமா!" என்று சிணுங்கினாள்.
அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வந்த, சித்தார்த், 3 நாட்களாக, பார்க்கமுடியாமல், தவித்தவன் இன்று, அவளை பார்த்ததும், மனசுக்குள் மகிழ்ச்சி அடைந்தான். ஆனாலும், அதை வெளிக்காட்டாது, தன் தங்கைகளிடம்,
"மூன்று நாளும், வீடு எவ்வளவு அமைதியாயிருந்தது. இன்று பார், ஒரே காட்டு கத்தலா இருக்கு" என்றான்.
இதை கேட்ட இலக்கியாவின் மனசு, சுருண்டது. இவனை பார்க்காது, தவித்துபோய் ஓடி வந்தால், நம் வருகையும், பேச்சும், அவனக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. ஆசையாகவோ, கேலியாகவோ பேசவேண்டாம். ஒரு பார்வையாவது பார்த்தால் ஆகாதா! நாம்தான், இவன் மீது உயிரை வைத்திருக்கோமோ! அவனுக்கு நம்மீது எந்த எண்ணமும் இல்லையோ! என்று மனசுக்குள் தவித்தாலும், எதையும் வெளிகாட்டாது, அத்தையிடம், "நான் வர்றேன், அத்தை, என்னால் யாருக்கும், எந்த சங்கடமும் வேண்டாம்." என்று கிளம்ப ஆயத்தமானாள்."ஏண்டி, உனக்கென்னாயிற்று? இன்றைக்கு, அவன் ஏதோ, விளையாட்டா, சொன்னான். இதைபோய், சீரியஸா எடுத்துகிட்டு," என்று சமாதானம், சொன்னார்.
சித்தார்த், சும்மா இராது, "ஏம்மா போறவங்களை தடுக்கிறீங்க! இன்றைக்கு, காலை டிபன், வெங்காய ஊத்தப்பம்; நான்கு மிச்சம்" என்றான். அவள் ரோஷமாக.
"அத்தை, நான் ஒன்றும், எங்க வீட்டிலே சாப்பாடு இல்லாமல் உங்க வீட்டுக்கு சாப்பிட வரல்லை! 3 நாளாக, உங்களை எல்லாம் பார்க்கலையேன்னு, வந்தா! நீங்க, இப்படித்தான் பேசறதா! இனிமேல், நான், உங்க வீட்டுக்கு, வந்தா, ஏன் வந்தேன்னு? கேளுங்க!" என்றவள் கண்கலங்க, குரல் தழுதழுக்க, உடனே வேகமாக அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.
இதை எதிர்பார்க்காதவர்கள், திகைச்சு போய் நிற்க, அத்தை, தான், "ஏ., இலக்கியா நில்," என்று கூற, அதை காதில் வாங்கி கொள்ளாத, இறங்கிய, இலக்கியாவின் காதுகளில், சித்தார்த் கூறியது, ஸ்பஷ்டமாக விழுந்தது. தன் அம்மா அழைத்தும், பதில் பேசாது சென்றவளின் மீது சித்தார்த்க்கு, கோபம் வர...
"போனா, போறா! விடுங்கம்மா! ஏன் போய் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க!" என்று அம்மாவை கடிந்து கொண்டான். ஆனா மனசில், சங்கடமாக உணர்ந்தான். தான் எப்போதும் போல், அவளை சீண்ட, இன்று என்னாயிற்று, அவளுக்கு! என யோசித்தான்.
அவன் அம்மாவோ, "பாவம்டா, அந்த பொண்ணு, அத்தை, அத்தைன்னு நம்ம வீட்டையே சுத்தி, சுத்தி வரா! அவளை போய்" என்று தன் மகனிடம், ஆதங்கப்பட்டார்.
இதையெல்லாம், பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த, அவன் தங்கைகளும் அம்மாவுக்கு ஆதரவாக பேச, அவன், மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
தன்வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இலக்கியாவின் மனமோ, சொல்ல முடியாத வேதனையில், தத்தளிக்க, பொங்கி வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள். 'இது விஷயம் நம் வீட்டுக்கு தெரியகூடாது.' என எண்ணியவள். தன் முகத்தை நன்கு துடைத்துவிட்டு, இயல்பாக வைத்துகொண்டு, சென்றாள்

















